சேலத்தில் பச்சிளம் குழந்தை விற்பனை; 3-வதும் பெண்ணாக பிறந்ததால் தந்தை ஆத்திரம்

 

சேலத்தில் பச்சிளம் குழந்தை விற்பனை; 3-வதும் பெண்ணாக பிறந்ததால் தந்தை ஆத்திரம்

சேலம்

சேலத்தில் மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால், ஆத்திரத்தில் பச்சிளம் குழந்தையை ரூ.1.20 லட்சத்திற்கு தந்தை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் நெத்திமேடு கரடு காந்தி நகரை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி விஜய் (32). இவரது மனைவி சத்யா (25), இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி சத்யாவுக்கு, மேச்சேரி அரசு மருத்துவமனையில் மூன்றாவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

சேலத்தில் பச்சிளம் குழந்தை விற்பனை; 3-வதும் பெண்ணாக பிறந்ததால் தந்தை ஆத்திரம்

இதனால் அதிர்ச்சியடைந்த விஜய், கடந்த நவம்பர் 15ஆம் தேனி அன்று குழந்தையை வீட்டின் அருகே வசித்து வரும் வெங்கடேசன் என்பவரது மனைவி கோமதியிடம் (34) ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். குழந்தையை காணாமல் தவித்த சத்யா, அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் வழக்குப்பதிவு செய்த போலீசார், கோமதியை பிடித்து விசாரித்ததில், குழந்தையை ஈரோட்டை சேர்ந்த நிஷா (40) என்பவரிடம் விற்றது தெரிந்தது.

சேலத்தில் பச்சிளம் குழந்தை விற்பனை; 3-வதும் பெண்ணாக பிறந்ததால் தந்தை ஆத்திரம்

தொடர்ந்து நிஷாவிடம் நடத்திய விசாரணையில் குழந்தை பவானியை சேர்ந்த சித்ரா (35), பாலாமணி (38) ஆகியோர் மூலம் பெங்களூரு எடுத்துச்செல்லப்பட்டு அங்கிருந்து, ஐதராபாத் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதனால் குழந்தையை மீட்க எஸ்.ஐ முரளி தலைமையில் தனிப்படை போலீசார் ஐதராபாத் விரைந்தனர். குழந்தை விற்பனை தொடர்பாக நிஷா, கோமதியை ஆகியோரை கைதுசெய்த போலீசார், தலைமறைவான விஜய், சித்ரா, பாலாமணி ஆகியோரை தேடி வருகின்றனர். முன்னதாக, கடந்த மாதம் அன்னதானப்பட்டி பகுதியில் வாங்கிய கடனுக்காக தந்தையே, குழந்தையை ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவத்தில் 3 பேர் கைதானது குறிப்பிடத்தக்கது.