கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற ரூ.77 லட்சம் பறிமுதல்

 

கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற ரூ.77 லட்சம் பறிமுதல்

கேரளா

கோவையில் இருந்து கேரளாவுக்கு இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட 77 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், அம்மாநிலம் முழுவதும் போலீசார் மற்றும் கலால் துறை அதிகாரிகள் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு பாலக்காடு மாவட்டம் புதுசேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், கோவையில் இருந்து திருச்சூர் நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்தனர்.

கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற ரூ.77 லட்சம் பறிமுதல்

அதில், வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி சுமார் 77 லட்சம் ரூபாய் பணத்தை மறைத்து கடத்திச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக பாலக்காடு வடகரபதியை சேர்ந்த மனோஜ் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். .