ரூ.3.6 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் – 6 பேரிடம் விசாரணை

 

ரூ.3.6 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் – 6 பேரிடம் விசாரணை

சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்பிலான 6.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 24ஆம் தேதி சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில்,தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ரூ.3.6 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் – 6 பேரிடம் விசாரணை

இதனையடுத்து அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில்
துணி மற்றும் உள்ளாடைகளில் மறைத்து கடத்திவந்த 3 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 6.8 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கம்கடத்தல் தொடர்பாக, பாட்ஷா, ஸ்ரீசாஜிப், நாசர், சாகுல்ஹமீது, யுவராஜ் மற்றும் தர்மராஜ் ஆகிய 6 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.3.6 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் – 6 பேரிடம் விசாரணை