தோட்டத்தில் பதுக்கிவைத்த 6 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல்

 

தோட்டத்தில் பதுக்கிவைத்த 6 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் செந்துறை அருகே தோட்டத்தில் அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த 6 கிலோ வெடி மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக ரகசிய தகவலின் பேரில் நத்தம் காவல் ஆய்வாளர் ராஜமுரளி தலைமையில் போலீசார், செந்துறை அடுத்த சிலுவன் குறையூர் பகுதியில் முருகேசன் என்பருக்கு சொந்தமான தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு 6 கிலோ அளவிலான கரிமருந்து, திரி, 600 வெடிகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், முருகேசன் அனுமதியின்றி நாட்டுவெடி தயாரித்து, கோயில் திருவிழாக்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள முருகேசனை தேடி வருகின்றனர். முன்னதாக திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி அலுவலகம் பகுதியில் இரு நாட்களுக்கு முன்பு 7 நாட்டு வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தோட்டத்தில் பதுக்கிவைத்த 6 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல்