குடோனில் பதுக்கிவைத்த 500 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

 

குடோனில் பதுக்கிவைத்த 500 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் குடோனில் பதுக்கிவைத்திருந்த 500 மூட்டை ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பாபநாசம் அடுத்த சரபோஜிராஜபுரம் பகுதியில் உள்ள குடோனில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குடிமை பொருள் வழங்கல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

குடோனில் பதுக்கிவைத்த 500 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

அதன் பேரில் வட்டாட்சியர் கண்ணன், வட்ட வழங்கல் அதிகாரி உள்ளிட்டோர் அதிரடியாக சென்று குடோனில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, முறைகேடாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 500 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக குடோன் உரிமையாளர் கருப்பையன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது முறைகேடாக ரேஷன் அரிசி விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கருப்பையனிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடோனில் பதுக்கிவைத்த 500 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்