வீட்டில் பதுக்கிய 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

 

வீட்டில் பதுக்கிய 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் ரேஷன் அரிசியை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வீட்டில் பதுக்கிய 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

அங்குள்ள பஷிராபாத் பகுதியில், ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அங்கிருந்து ஆந்திராவுக்கு கடத்த திட்டமிட்டுள்ளதாகவும் வாணியம்பாடி வட்டாட்சியருக்கு
ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து காவல்துறை உதவியுடன் அந்த வீட்டுக்குச் சென்ற வட்டாட்சியர் சிவபிரகாசம் தலைமையிலான அதிகாரிகள் , அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் ரேஷன் அரிசிகள் பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் பதுக்கிய 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இப்படி ரேஷன் அரிசி பதுக்கல் நடைபெறுவதுடன், அங்கிருந்து ஆந்திரா கடத்தில் செல்லப்பட்டு கோழிப்பண்ணைகளுக்கு தீவனமாக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

-பழனி