அரிசி கடையில் பதுக்கிய 2 டன் ரேஷன்அரிசி பறிமுதல்

 

அரிசி கடையில் பதுக்கிய 2 டன் ரேஷன்அரிசி பறிமுதல்

கோவை

கோவை அரசி கடை வீதியில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 2 டன் ரேஷன் அரிசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.. கோவை அரிசி கடை வீதியில் விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசி பதுக்கி வைதுள்ளதாக குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது. புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று அதிகாரிகள் கடைகளில் சோதனை நடத்தினர்.

அரிசி கடையில் பதுக்கிய 2 டன் ரேஷன்அரிசி பறிமுதல்

அப்போது அங்குள்ள கடை ஒன்றில், 43 மூட்டைகளில் சுமார் 2 டன் அளவிலான ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கடைவீதி காவல்நிலைய போலீசார் உதவியுடன், அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுகுறித்து கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசிகள் லாரி மூலம் குடிமை பொருள் அலுவலகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.