கும்பகோணத்திற்கு சொகுசு காரில் கடத்திவந்த 110 லிட்டர் சாராயம் பறிமுதல் – ஒருவர் கைது

 

கும்பகோணத்திற்கு சொகுசு காரில் கடத்திவந்த 110 லிட்டர் சாராயம் பறிமுதல் – ஒருவர் கைது

தஞ்சாவூர்

காரைக்காலில் இருந்து கும்பகோணத்திற்கு சொகுசு காரில் கடத்திவரப்பட்ட 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக ஒருவரை கைதுசெய்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து, கும்பகோணத்திற்கு சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கும்பகோணம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அழகேசன் தலைமையில் தடைப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

கும்பகோணத்திற்கு சொகுசு காரில் கடத்திவந்த 110 லிட்டர் சாராயம் பறிமுதல் – ஒருவர் கைது

அப்போது, அந்த வழியாக சென்ற சொகுசு காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் காரின் உள்ளே சாராயத்தை மறைத்து கடத்திவந்தது தெரியவந்தது. காரில் இருந்து சுமார் 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக கார் ஓட்டுநரை கைதுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கும்பகோணத்தை சேர்ந்த பாபு என்பதும், காரைக்காலில் இருந்து விற்பனை செய்வதற்காக சாராயத்தை கடத்திவந்ததும் தெரியவந்தது.