வாட்ஸ் அப் மூலம் தொடர் மிரட்டல்- இயக்குநர் சீனு ராமசாமி போலீசில் புகார்
Oct 28, 2020, 19:01 IST1603891908000
தனக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என இயக்குநர் சீனு ராமசாமி போலீசில் புகார் அளித்துள்ளார்.
‘என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும். அவசரம்’ என இயக்குநர் சீனு ராமசாமியின் ட்விட்டர் பதிவு தற்போது பேசும் பேசும்பொருளாகியுள்ளது. 800 பட விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவித்ததால் தனக்கு சிலர் மிரட்டல் விடுப்பதாக சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சிலர் சமூக வலைதளங்களில் ஆபாச வார்த்தைகளால் என்னை திட்டுவதாக வேதனை தெரிவித்தார்.
இந்நிலையில் வாட்ஸ் அப் மூலமும் செல்போனிலும் தொடர்ந்து மிரட்டல் வருவதாக கூறி இயக்குநர் சீனு ராமசாமி போலீசில் புகார் அளித்தார். தனக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.