நாம் தமிழர் கட்சியை உடைத்துக் காட்டு… சவால் விட்ட சீமான்!

 

நாம் தமிழர் கட்சியை உடைத்துக் காட்டு… சவால் விட்ட சீமான்!

நாம் தமிழர் கட்சியை இரண்டாக உடைக்க முடியாது. முடிந்தால் உடைத்துக் காட்டு என்று எதிர் தரப்பினருக்கு சீமான் சவால் விட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் முன்னணி நிர்வாகியும் நாம் தமிழர் கட்சி சார்பில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டவருமான கல்யாண சுந்தரத்துக்கும் சீமானுக்கும் மோதல் என்று சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகி வந்தது. நான் செய்த தவறு என்ன, என்னை சந்திக்க மறுப்பது ஏன் என்று கல்யாண சுந்தரம் கேள்வி எழுப்பியிருந்தார்.

நாம் தமிழர் கட்சியை உடைத்துக் காட்டு… சவால் விட்ட சீமான்!


இந்த நிலையில் சீமான் யூடியூப் சானல் ஒன்றுக்கு விரிவான பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டி வெளியாகவில்லை என்றாலும், அது தொடர்பான தகவல் தற்போது கசிந்து வருகிறது. “அடுத்து நான்தான், நான் இல்லை என்றால் கட்சி இல்லை என்று எவன் நினைக்கிறானோ அவன் தூக்கி வீசப்படுவான். அவன் இல்லை என்றாலும் கட்சி நடக்கும் என்று காட்ட வேண்டிய நிலை வந்துள்ளது.

நாம் தமிழர் கட்சியை உடைத்துக் காட்டு… சவால் விட்ட சீமான்!


நிகழ்ச்சி தொகுப்பாளர் கல்யாணசுந்தரம் பற்றி கேட்ட போது, “இது போன்ற நயவஞ்சகத்தை, சூழ்ச்சி துரோகத்தை நான் உலகத்திலேயே பார்த்தது இல்லை. எவ்வளவோ பேரை எதிர்த்து அரசியல் செய்திருக்கிறேன், சிறைக்குச் சென்றிருக்கிறேன். அப்போது எல்லாம் கூட துளி கூட கலங்கியது இல்லை. அவர்கள் என் சாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கட்சியில் ஆயிரம் பேர் வருவான் போவான், கட்சியில் இரண்டு பேர் இல்லை என்பதால் கட்சி உடைந்துவிடுமா? சீமானை இரண்டாக வெட்டினாலே ஒழிய கட்சி எப்படி உடையும்? சவால் விடுகிறேன்… பந்தயம் வைத்துக்கொள்ளுவோம், கட்சியை இரண்டாக உடைத்துக் காட்டு.

நாம் தமிழர் கட்சியை உடைத்துக் காட்டு… சவால் விட்ட சீமான்!


நான் எத்தனை முறை வேண்டுமானாலும் எதிரிகள் கைகளால் சாகத் தயாராக உள்ளேன். ஆனால், துரோகிகள் கையால் என் உடலில் சிறு கீறலைக் கூட ஏற்கத் தயாராக இல்லை” என்று கூறியுள்ளார். முழு பேட்டி எப்போது வெளியாகும் என்று குறிப்பிடவில்லை. அதே நேரத்தில் சீமானின் தம்பிகள் இந்த பேட்டியைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.