கொளத்தூர் மணி மருத்துவமனையில் அனுமதி! உடல்நலத்துடன் மீண்டுவர சீமான் வாழ்த்து

 

கொளத்தூர் மணி மருத்துவமனையில் அனுமதி! உடல்நலத்துடன் மீண்டுவர சீமான் வாழ்த்து

திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, பெரியாரின் கருத்துகளை மக்களிடையே கொண்டு செல்வதற்காக முழு முனைப்போடு உழைத்துக் கொண்டிருப்பவர். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொளத்தூர் மணி மருத்துவமனையில் அனுமதி! உடல்நலத்துடன் மீண்டுவர சீமான் வாழ்த்து

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், “திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதறிந்து மிகுந்த கவலையுற்றேன். அண்ணன் விரைந்து முழு உடல்நலம் பெற்று மீண்டு வந்து, சமூகப்பணிகளைத் தொடர விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்!