இந்த முறை உறுதியாக நாம் தமிழர் வெல்லும்- சீமான்

 

இந்த முறை உறுதியாக நாம் தமிழர் வெல்லும்- சீமான்

தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் செஞ்சியில், நாம் தமிழர் கட்சி சார்பில் விவசாயி சின்னத்தில் போட்டியிடும் அபூ.சுகுமாரை ஆதரித்து திறந்த வேனில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த முறை உறுதியாக நாம் தமிழர் வெல்லும்- சீமான்

அப்போது பேசிய சீமான்.“தமிழகத்தில் லஞ்சம், ஊழல் அதிக அளவில் உள்ளது. நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல புரட்சிவாதிகள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் முக்கியமல்ல, அரசியல் மாற்றமே மிக முக்கியம். மாற்றம் என்பது அதிமுகவை அகற்றி திமுகவை அமர வைப்பது அல்ல, மாற்று அரசியலை கொண்டு வருவதே உண்மையான மாற்றம். புரட்சி என்பது இரத்தம் சிந்துவது மட்டும் அல்ல, வெளிப்படையாக அநீதியை அகற்றி, புதிய தேசம் அமைக்க போராடுவது, நாங்கள் ஆட்சி வந்தவுடன் அடிப்படை கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசமாக வழங்குவோம். சாதாரண குடிமகனுக்கும் சிறப்பான மருத்துவம் கிடைக்க வேண்டும். அமைச்சர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்க வேண்டும். இந்த முறை உறுதியாக நாம் தமிழர் வெல்லும். நாம் தமிழரின் வெற்றி, தேர்தல் வெற்றியல்ல வரலாற்று வெற்றி” எனக் கூறினார்.