தமிழ்நாட்டில் நட்டா… வாய்ப்பில்ல ராஜா நோட்டா தான் – டைமிங்கில் பஞ்ச் அடித்த சீமான்!

 

தமிழ்நாட்டில் நட்டா… வாய்ப்பில்ல ராஜா நோட்டா தான் – டைமிங்கில் பஞ்ச் அடித்த சீமான்!

நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. நாம் தமிழரில் சீமான் மட்டுமே அறியப்படும் முகமாக இருப்பதால் அவரே அனைத்து வேட்பாளர்களுக்கும் ஆதரவாக வாக்கு சேகரித்துவருகிறார். பிரச்சாரத்தில் திமுக, அதிமுக கட்சிகளைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அனிதா பர்வீனை ஆதரித்து பள்ளபட்டி பகுதியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மாலை பிரச்சாரம் செய்தார்.

தமிழ்நாட்டில் நட்டா… வாய்ப்பில்ல ராஜா நோட்டா தான் – டைமிங்கில் பஞ்ச் அடித்த சீமான்!

அப்போது பேசிய சீமான், “காங்கிரஸ் எங்கள் இனத்தை அழித்தது என்றால், பாஜக மனிதகுலத்தின் எதிரி. இந்த இரண்டு கட்சிகளையும் நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன். இவர்கள் இருவரையும் எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டுக்குள்ளோ, என் இனத்துக்குள்ளோ அனுமதிக்கவே மாட்டேன். அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று ஒரு தடவையாவது ஸ்டாலின் சொல்வாரா? தமிழ்நாட்டில் பாஜகவுக்கு கதவு திறந்துவிட்டவர்கள் அதிமுகவும், திமுகவும்தான். எத்தனை முறை இங்கு நட்டா வந்தாலும், நோட்டாவுக்குக் கீழ்தான் பாஜகவுக்கு வாக்குகள் விழும். தமிழ் மண்ணில் தாமரை மலரவே மலராது” என்றார்.

தமிழ்நாட்டில் நட்டா… வாய்ப்பில்ல ராஜா நோட்டா தான் – டைமிங்கில் பஞ்ச் அடித்த சீமான்!

முன்னதாக, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா தமிழகத்திற்கு நேற்று வருகை தந்தார். அப்போது துறைமுகம் தொகுதி வேட்பாளர் வினோஜ் பி செல்வத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இதனை முன்வைத்தே சீமான் பஞ்ச் அடித்திருக்கிறார்.