ஒரே வருடத்தில் மதுரை சிட்னியாக மாற்றுவேன் – செல்லூர் ராஜூ

 

ஒரே வருடத்தில் மதுரை சிட்னியாக மாற்றுவேன் – செல்லூர் ராஜூ

தேர்தலுக்கு இன்னும் சிறிது நாட்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். அந்த வகையில் மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் செல்லூர் ராஜூ, தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்துவருகிறார்.

ஒரே வருடத்தில் மதுரை சிட்னியாக மாற்றுவேன் – செல்லூர் ராஜூ

சொக்கலிங்க நகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்த அமைச்சர் செல்லூர் ராஜூ, “என்னைப் பற்றி யாரும் தவறாக கூற இயலாது. நான் உங்கள் வீட்டுப்பிள்ளை. உங்கள் தொண்டன், எப்போதும் தவறு செய்யமாட்டேன். வாக்களித்த மக்களுக்கு உண்மையுடனும் நன்றியுடனும் இருப்பேன். தொகுதிக்காக மட்டுமின்றி மதுரைக்காகவும் பாடுபடுவேன். மதுரையை சிட்னி நகரமாக மாற்றுவேன் எனக் கூறியபோது கேலி, கிண்டல் செய்தார்கள். அவர்களுக்கு சொல்கிறேன். ஒரே வருடத்தில் சொன்னதை செய்து காட்டுவேன். என்னுடன் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் இருக்கமாட்டார்கள், சமூக விரோதிகள் இருக்க மாட்டார்கள்” எனக் கூறினார்.