கந்த சஷ்டி விவகாரம்: ஆரியத்திடம் சரணாகதி அடைந்த திராவிடம்… – தி.மு.க-வுக்கு சீமான் கண்டனம்

 

கந்த சஷ்டி விவகாரம்: ஆரியத்திடம் சரணாகதி அடைந்த திராவிடம்… – தி.மு.க-வுக்கு சீமான் கண்டனம்

முருகனின் தனித்தன்மையும். பெரும்புகழும் எத்தகைய இழி பரப்புரையாலும் குன்றிவிடாது. இந்த விவகாரத்தில் அரசியலுக்காக ஆரியமயமாக்கல் குறித்து தி.மு.க வாய் திறக்காதது சந்தர்ப்பவாதம் என்று சீமான் கூறியுள்ளார்.

கந்த சஷ்டி விவகாரம்: ஆரியத்திடம் சரணாகதி அடைந்த திராவிடம்… – தி.மு.க-வுக்கு சீமான் கண்டனம்இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர் இறையோன் முப்பாட்டன் முருகன் குறித்தான யூடியூப் ஆபாசப் பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி பலவிதமான விவாதங்களை உருவாக்கி இருக்கிறது. தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக இருக்கிற தமிழ் இறையோன் முருகனைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள அக்காணொளி ஒட்டுமொத்தத் தமிழர்கள் மீதும், தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்கள் மீதும் கல்லெறிகிற கயமைத்தனமாகும். வரலாற்றின் வீதிகளில் தொடர்ச்சியாக அடிமைப்படுத்தப்பட்டு, அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் மறைக்கப்பட்ட வீரவரலாற்றையும், பண்டைய அடையாளங்களையும் மீட்டெடுக்கும் பெரும்பணியைச் செய்ய வேண்டிய தருணத்தில், தமிழின முன்னோர்களை இடித்துரைத்து பரப்புரை செய்யும் செயல்கள் கருத்துரிமை வரம்பிற்கு அப்பாற்பட்டவையாகும்.

கந்த சஷ்டி விவகாரம்: ஆரியத்திடம் சரணாகதி அடைந்த திராவிடம்… – தி.மு.க-வுக்கு சீமான் கண்டனம்ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தொன்ம வரலாறு கொண்ட தமிழர் எனும் பேரினம், தனக்கென்று தனித்த கலை, இலக்கியம், பண்பாடு, நாகரீகம், வாழ்வியல், மெய்யியல் கோட்பாடு, இறை வழிபாடு என யாவும் கொண்டதாகும். ஆரியப்படையெடுப்பால் இடையில் நிகழ்ந்த கலப்பினால் அவை யாவும் சிறுக சிறுக சிதைக்கப்பட்டு, ஒவ்வொன்றாய் திருடப்பட்டு, புனைந்து நிலைநாட்டப்பட்டிருக்கிறது. தனக்கென தனித்த அடையாளத்தையோ, பண்பாட்டுக்கூறுகளையோ, வழிபாட்டு முறைமைகளையோ, இறையியல் மரபுகளையோ கொண்டிராத ஆரியம் எல்லாவற்றையும் திருடிச்சேர்த்து, புழுகிப் புராணமாகவும், இதிகாசமாகவும் மாற்றி நிலைநிறுத்தி பெரும்பான்மை மக்களை நம்ப வைத்துப் பொதுப்புத்தியில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது. ஆரியத்தை எதிர்த்து சமரிட்ட புத்தர், சமரச சன்மார்க்கம் கண்ட வள்ளலார், ஐயா வழியென தனி வழிப்பாட்டு முறையை ஏற்படுத்திய வைகுந்தர், இசுலாமியர்களோடு இணக்கம் காட்டிய மராத்திய சிவாஜி என தன்வயப்படுத்தி உட்செரிக்கும் ஆரியம், அம்பேத்கரையும், வள்ளுவனையும்கூட திருட எத்தனித்து வருவதை நாடறிந்ததே!

கந்த சஷ்டி விவகாரம்: ஆரியத்திடம் சரணாகதி அடைந்த திராவிடம்… – தி.மு.க-வுக்கு சீமான் கண்டனம்திருடிச்சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களில் தமிழின முன்னோர்கள் முருகன், சிவன், கண்ணன், திருமால், கொற்றவை என யாவரும் இன்றைக்கு முழுமையாக ஆரியமயக்கப்பட்டுவிட்டனர். நாட்டார் தெய்வங்கள் மீது படையெடுப்பை நிகழ்த்தாத ஆரியம், திணை நிலங்களின் வாழ்ந்த தெய்வங்கள் மீதும், தமிழரின் பண்பாட்டு விழுமியங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தி மொத்தமாய் அபகரித்துவிட்டது. விளைவாக, முருகனை சுப்ரமணியனாக்கினார்கள். கண்ணனை கிருஷ்ணனாக்கினார்கள். திருமாலை விஷ்ணுவாக்கினார்கள். கொற்றவையை பார்வதியாக்கினார்கள். சிவனை ருத்ரனாக்கினார்கள். இத்தகைய முறையில் நிகழ்ந்த ஆரியமயமாக்கல் மூலம் ஆபாசக்கதைகளை எழுதி, இட்டுக்கட்டி நமது முன்னோர்களை மொத்தமாய் புராணப்பாத்திரங்களாக மாற்றி நிறுத்தினார்கள். இதனை மிகச் சரியாக உணர்ந்து, ஆரியச் சதிகளை முறியடித்து தமிழர்களுக்கென்று இருந்த பாரம்பரிய வழிபாட்டை மீட்டெடுத்து வழிகாட்டாது ‘கடவுள் மறுப்பு’ என திராவிட இயக்கங்கள் மொத்தமாய் கைவிரித்ததன் விளைவாகத்தான் தமிழ்த்தேசிய இனத்தின் மக்களை ‘இந்து’ எனும் கற்பிதத்திற்குள் மொத்தமாகத் தள்ளி ஆட்கொண்டு ஆண்டுக்கொண்டிருக்கிறது ஆரியம்.

http://

முப்பாட்டன் முருகனைப் பழித்துரைத்து இழிவுசெய்யும் நோக்கோடு வெளியிடப்பட்டுள்ள அக்காணொளி உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பகுத்தறிவுப் பரப்புரை எனும் பெயரில் ஆரியம் கற்பித்திருக்கிற ஆபாசக் கட்டுக்கதைகளை அருவெறுக்கத்தக்க வகையில் விமர்சனம் என்ற பெயரில் வக்கிரத்தை உமிழ்ந்து, பெருவாரியான மக்களிடம் எதிர்மறையானத் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களுக்குள் மதவுணர்ச்சியை மேலிடச்செய்து மதவாத இயக்கங்கள் வேரூன்றவே திராவிட ஆதரவாளர்களின் இத்தகையச் செயல்கள் உதவுகிறதே ஒழிய, தமிழுக்கும், தமிழர்க்கும் அணுவளவும் நலன் பயக்கவில்லை. முருகனை விமர்சிக்கும் அந்நபருக்கும், தனக்கும் தொடர்பில்லை எனக்கோரி வாக்கு அரசியலுக்காக ஆரியமயமாக்கல் குறித்து திமுக வாய்திறக்க மறுத்திருப்பது பச்சை சந்தர்ப்பவாதம்; ஆரியத்திடம் சரணாகதி அடையும் திராவிடத்தின் வழமையான பிழைப்புவாதமென்றால், மிகையில்லை. இதுபோன்ற இழிசெயல்களால் உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் முப்பாட்டன் முத்தமிழ் முருகனின் தனித்தன்மையும், பெரும்புகழும் ஒருபோதும் குன்றிவிடாது” என்று கூறியுள்ளார்.