அமைச்சர் செல்லூர் ராஜுவை சீண்டிய சீமான்!

 

அமைச்சர் செல்லூர் ராஜுவை சீண்டிய சீமான்!

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடித்த அரசியல் கட்சிகள், அதிரடியாக பிரச்சாரத்தில் களமிறங்கியிருக்கின்றன. அந்த வகையில், தேர்தலில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அமைச்சர் செல்லூர் ராஜுவை சீண்டிய சீமான்!

அரக்கோணத்தில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட சீமான், 110 நாளாக டெல்லியில் போராடும் நம் விவசாயிகளை அரசு கண்டு கொள்ளவில்லை. அது அவர்களுக்கான போராட்டம் இல்லை. மக்களுக்கான போராட்டம். விவசாயிகள் அங்கு உயிரிழப்பது நாளை மக்கள் உயிரிழப்பதற்கான முன்னோட்டம். 3ஜி, 4ஜி வரிசையில் 11ஜி என எது வந்தாலும் விவசாயி இல்லாமல் வாழ முடியாது என்று கூறினார்.

அமைச்சர் செல்லூர் ராஜுவை சீண்டிய சீமான்!

தொடர்ந்து பேசிய அவர், மருத்துவ படிப்புக்கு தகுதித் தேர்வு வைப்பதை போல வேட்பாளர்களை தேர்வு செய்யவும் தகுதித் தேர்வு வைக்க வேண்டும். அப்படி தேர்வு வைத்தால் அமைச்சர் செல்லூர் ராஜு போன்றவர்கள் எல்லாம் அமைச்சராக வர முடியுமா? என அதிரடியாக பேசினார். சீமானின் இந்த பேச்சு அதிமுக தலைமையை சீண்டி பார்த்துள்ளது.