குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்போருக்கு ரூ.5000- சீமான்

 

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்போருக்கு ரூ.5000- சீமான்

ராமநாதபுரத்தில் பரப்புரை மேற்கொண்ட சீமான், “மைதாவிற்கு பதில் பனங்கிழங்கை பயன்படுத்தி மாவு தயாரித்து அதை கொண்டு சப்பாத்தி செய்யலாம். களி கிண்டலாம். நானும் என் மகன் மாவீரனும் அதைத்தான் சாப்பிடுகிறோம். பெற்று கொடுங்கள் பிள்ளையை, கற்று கொடுக்கிறோம் நாங்கள்; பிள்ளைகள் உங்கள் வீட்டின் செல்வங்கள் அல்ல, அவர்கள் நாட்டின் செல்வங்கள். அரசியல்வாதிகள் எப்போது அடுத்த தேர்தலை பற்றிதான் சிந்திப்பார்கள்; தலைவர்கள் மட்டும்தான் அடுத்த தலைமுறையை பற்றி சிந்திப்பார்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்போருக்கு ரூ.5000- சீமான்

பாஜகவை கண்டு ஒருபோதும் பயமில்லை. என்னை தாண்டிதான் பாஜக தமிழ்நாட்டிற்கு வர முடியும். நான் ஆட்சியமைத்தால் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்போருக்கு ரூ.5000 வைப்புத்தொகை வழங்கப்படும். மனிதர்களை கொலை செய்வது குற்றம்போல மரங்களை வெட்டுவது குற்றம் என குற்றவாளியை சிறையிலடைப்பேன். நாங்கள் செய்வது இன உரிமை அரசியல். அதை இனவெறி என பேசுவோர்தான் இனவெறியர்கள்.விமர்சனத்தை பற்றி கவலையில்லை; கோபம் இல்லை என்றால் நான் கோடம்பாக்கத்தில் இருந்திருப்பேன்” என பேசினார்.