அனுபவ பட்டு சொல்றேன்! அரசியலுக்கு வராதீங்க.. ரஜினிக்கு சீமான் அட்வைஸ்

 

அனுபவ பட்டு சொல்றேன்! அரசியலுக்கு வராதீங்க.. ரஜினிக்கு சீமான் அட்வைஸ்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “என்றைக்கு நடிகர் ரஜினி வேறு ஒருவரை முதல்வராக அறிவிப்பேன் என கூறினாரோ அன்றைக்கே அவரிடம் உள்ள முரண்பாடு நீங்கியது. நடிகர் ரஜினிக்கு நான் வைக்கக்கூடிய வேண்டுகோள் அரசியலில் இறங்க வேண்டாம். புகழ்ச்சியை மட்டுமே பார்த்தவர் அவர் நாங்கள் சந்திப்பது போன்ற அவச்சொற்களை தாங்க முடியாது.

அனுபவ பட்டு சொல்றேன்! அரசியலுக்கு வராதீங்க.. ரஜினிக்கு சீமான் அட்வைஸ்

இந்த நாட்டில் கிளீன் இந்தியா இருக்கிறதே தவிர கிரீன் இந்தியா இல்லை. ஒரு மனிதனுக்கு 422 மரங்கள் தேவை. 1.5 கோடி தொண்டர்கள் இருக்கும் கட்சிகள் மரம் நட முயற்சி எடுக்கவில்லை. ராமர் கோவிலுக்கு கல் எடுத்து வரச் சொன்ன பிரதமர் மரம் நட வேண்டும் எனக் கூறவில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி மக்களிடம் கூட்டணி வைத்துள்ளது. சில கட்சிகளும் கொள்கை முரண் இருந்தாலும் கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும். காங்கிரஸ் இனத்தின் எதிரி, பாஜக மனிதர்குல எதிரி. தேர்தல் ஆணையம், நீதிமன்றம், சிபிஐ அமைப்புகள் ஆகியவை பிரதமர் மோடியின் விரல்கள் போன்றவை. அவர் நீட்டச் சொன்னாள் நீட்டும் மடக்க சொன்னால் மடக்கும்”