“கேட்கும் படம்; பிறந்தநாள் கொண்டாட்டம்”: குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் பார்க்க “ப்ரைவசி தியேட்டர்”… !

 

“கேட்கும் படம்; பிறந்தநாள் கொண்டாட்டம்”: குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் பார்க்க  “ப்ரைவசி தியேட்டர்”… !

கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் தியேட்டர்களுக்கு வராத நிலையில் அவர்களை கவரும் வகையில் ப்ரைவசி தியேட்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

“கேட்கும் படம்; பிறந்தநாள் கொண்டாட்டம்”: குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் பார்க்க  “ப்ரைவசி தியேட்டர்”… !

தமிழகத்தில் கடந்த 7 மாத காலமாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் திரைத்துறையினரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தியேட்டர்கள் திறக்கப்பட்டன. இருப்பினும் புது படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாத காரணத்தினாலும், கொரோனா அச்சத்தினாலும் மக்கள் கூட்டம் வருவது வெகுவாக குறைந்து காணப்படுகிறது.

“கேட்கும் படம்; பிறந்தநாள் கொண்டாட்டம்”: குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் பார்க்க  “ப்ரைவசி தியேட்டர்”… !

இந்த சூழலில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் நடத்தும் ஸ்ரீ சக்தி சினிமாஸ் தியேட்டரில் ப்ரைவசி தியேட்டர் கொண்டு வரப்பட்டுள்ளது.

“கேட்கும் படம்; பிறந்தநாள் கொண்டாட்டம்”: குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் பார்க்க  “ப்ரைவசி தியேட்டர்”… !

இதுகுறித்து கூறியுள்ள அவர் , ” 8 ஸ்க்ரீன்கள் கொண்ட மல்டிப்ளக்ஸ் தியேட்டர் என்பதால் 150 பேர் மட்டுமே அமரக்கூடிய ஒரு ஸ்க்ரீனை ப்ரைவசி தியேட்டராக ஒதுக்கியுள்ளோம் . இங்கு ரூ.3999 செலுத்தினால் 25 நபர்கள் வரை அனுமதிக்கப்படுவர். அதற்கு மேல் வரும் ஒவ்வொரு நபருக்கும் 120 ருபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் . பிறந்தநாள் போன்ற கொண்டாடங்களுக்கு இது அளிக்கப்படும். அன்று தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் எந்த படத்தை விரும்புகிறார்களோ அந்த படம் திரையிடப்படும். கொரோனா அச்சம்
இன்னும் மக்கள் மத்தியில் குறையவில்லை. இந்த சூழலில் தனியாகவோ , குடும்ப உறுப்பினர்களோ மட்டுமே பார்க்க கூடிய இந்த ப்ரைவசி தியேட்டர் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்று நம்புகிறோம்” என்றார்.