உயிருக்கு அச்சுறுத்தல்… பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

 

உயிருக்கு அச்சுறுத்தல்… பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டதையடுத்து பிரதமர்களின் பாதுகாப்புக்காக சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி.) உருவாக்கப்பட்டது. 1991ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் நிகழ்ந்த பிறகு, முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வழங்க எஸ்.பி.ஜி. சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 2003ல் வாஜ்பாய் தலைமையிலான அரசு, எஸ்.பி.ஜி. பாதுகாப்பு காலத்தை, அச்சுறுத்தலின் அளவை கருத்தில் கொண்டு மாற்றம் செய்யலாம் என திருத்தம் கொண்டு வந்தது. ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு கடந்த 28 ஆண்டுகளாக எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. தற்போது 3000 பேர் கொண்ட எஸ்.பி.ஜி. குழு பிரதமர் நரேந்திர மோடி ஒருவருக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கி வருகிறது.

உயிருக்கு அச்சுறுத்தல்… பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

இந்நிலையில் அச்சுறுத்தும் வகையில் மின்னஞ்சல் வந்ததால் பிரதமர் மோடியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மும்பையின் தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்துக்கு வந்த மின்னஞ்சல் தொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.