“சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்தார்” -மருத்துவமனை செக்யூரிட்டி செஞ்ச பலான வேலை

 

“சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்தார்” -மருத்துவமனை செக்யூரிட்டி செஞ்ச பலான வேலை


ஒரு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணிடம் ஒரு செக்யூரிட்டி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார் .

“சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்தார்” -மருத்துவமனை செக்யூரிட்டி செஞ்ச பலான வேலை


மகாராஷ்டிராவின் புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 19 வயது பெண் நோயாளி சிகிச்சைக்கு சேர்ந்தார் .அப்போது முதல் அந்த மருத்துவமனையின் 47 வயதான செக்யுரிட்டிக்கு அந்த பெண் மீது ஒரு கண் இருந்தது .அதனால் அந்த பெண்ணிடம் அவர் மோக வலை வீசியுள்ளார் .அதனால் அந்த பெண்ணின் அறைக்கு அடிக்கடி வந்து நோட்டமிட்டுள்ளார் .
பிறகு அவர் டிசம்பர் 21 ஆம் தேதி இரவு அந்த பெண்ணின் அறைக்குள் நுழைந்தார் .அப்போது அந்த பெண்ணிடம் அவர் தன்னை ஒரு காவல் துறை அதிகாரி என்று கூறினார் .அவரின் தோற்றத்தை வைத்து அதை உண்மையென்று நம்பிய அந்த பெண் அவரை அந்த அறைக்குள் அனுமதித்தார் .பின்னர் அந்த செக்யூரிட்டி அந்த பெண்ணிடம் ‘உன்னை பக்கத்துக்கு அறைக்கு அழைத்து சென்று விசாரிக்க வேண்டும்’ என்று கூறி அவரை அங்கிருந்து இழுத்து சென்றுள்ளார் .பின்னர் பக்கத்து அறையில் அவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார்
அதனால் அந்த பெண் கூச்சல் போட்டதும் அந்த செக்யுரிட்டி அங்கிருந்து ஓடி விட்டார் .பிறகு அங்கு நடந்த அந்த சம்பவத்தை பற்றி அந்த பெண் மருத்துவமனை ஊழியர்களிடம் கூறினார் .அவர்கள் போலீசை உடனே வரவைத்தார்கள்
அங்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் அந்த செக்யுரிட்டியின் குற்றம் ஊர்ஜிதமானது .மேலும் அவர் இதே போல பல நோயாளிகளிடம் தவறாக நடந்து கொண்ட தகவலும் தெரிந்தது அதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .

“சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்தார்” -மருத்துவமனை செக்யூரிட்டி செஞ்ச பலான வேலை