“அரசு அதிகாரிகள் வீட்டில் ரகசிய குறியீடு” கொள்ளையர்களின் சதித் திட்டமா?

 

“அரசு அதிகாரிகள் வீட்டில் ரகசிய குறியீடு” கொள்ளையர்களின் சதித் திட்டமா?

மதுரையில் அரசு அதிகாரிகளின் வீட்டில் ரகசிய குறியீடுகள் வரையப்பட்டு இருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை, டிஆர்ஓ காலணியில் இருக்கும் ஒரு சில வீடுகளில் பச்சை, ஆரஞ்சு உள்ளிட்ட பல வண்ணங்களில் ரகசிய குறியீடுகள் போடப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் சில எழுத்துக்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குறிப்பாக, குறியீடுகள் பெரும்பாலும் அரசு அதிகாரிகளின் வீடுகளில் தான் இருக்கிறதாம். இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள், போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“அரசு அதிகாரிகள் வீட்டில் ரகசிய குறியீடு” கொள்ளையர்களின் சதித் திட்டமா?

ஏற்கனவே, இது போன்று குறியீடுகள் போடப்பட்டிருந்த இல்லங்களில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருக்கிறார்களாம். அதனால், திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதற்கான குறியீடுகளாக இருக்கலாம் என்றும் கொள்ளையடிக்க வடமாநிலத்தவர்கள் இவ்வாறு எழுதி வைத்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.