கொல்கத்தா Mohun Bagan அணிக்கு இரண்டாம் வெற்றி – ISL கால்பந்து திருவிழா

 

கொல்கத்தா Mohun Bagan அணிக்கு இரண்டாம் வெற்றி – ISL கால்பந்து திருவிழா

கால்பந்து ரசிகர்களில் கொண்டாட்டமான ISL திருவிழா மிக உற்சாகமாகத் தொடங்கி விறுவிறுப்பான போட்டிகளைத் தந்துகொண்டிருக்கிறது. தினமும் மாலை நேரத்தில் போட்டிகளை ரசித்துக்கொண்டிருக்கிறார்கள் பார்வையாளர்கள். கொரோனா காலம் என்பதால், அனைத்துப் போட்டிகளும் கோவா மைதானங்களில் மட்டுமே நடக்கின்றன. மைதானத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

நேற்றைய போட்டியில் Mohun Bagan அணியும் East Bengal அணியும் மோதிக்கொண்டன.

கொல்கத்தா Mohun Bagan அணிக்கு இரண்டாம் வெற்றி – ISL கால்பந்து திருவிழா

Mohun Bagan அணியின் முதல் போட்டியில் கேரளாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான அந்தப் போட்டியில் ராய்கிருஷ்ணா அட்டகாசமான ஒரு கோல் அடித்து Mohun Bagan அணிக்கு வெற்றித் தேடித்தந்தார். East Bengal அணிக்கு நேற்றுதான் முதல் போட்டி. அதனால், உற்சாகமாகக் களம் கண்டனர்.

இரு அணிகளும் கோல் போட முயற்சியில் இருந்தாலும், எதிரணியை கோல் அடிக்க வாய்ப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் முயன்றார்கள். அதையும் மீறி Mohun Bagan அணியின் ராய் கிருஷ்ணா 49 வது நிமிடத்தில் அசத்தலான கோல் அடித்தார். முதல் போட்டியிலும் இவர் கோல் அடித்தது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா Mohun Bagan அணிக்கு இரண்டாம் வெற்றி – ISL கால்பந்து திருவிழா

Mohun Bagan அணி 1:0 எனும் நிலையில் முன்னேறியதால், ஆட்டம் பரபரத்தது. 85 வது நிமிடத்தில் Mohun Bagan அணியின் மன்வீர் சிங் தனது பங்களிப்பாக ஒரு கோல் அடித்தார்.

ஆட்டத்தின் இறுதி வரை East Bengal அணியால் ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லை. எனவே, Mohun Bagan அணி 2:0 எனும் கணக்கில் வெற்றிபெற்றது.

தற்போது Mohun Bagan பாயிண்ட் டேபிளில் இரண்டு வெற்றிகளோடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது.