“புருஷனை கொன்று விட்டு நிவாரணம் தரும் திமுக – அதிமுக”: சீமான் ஆவேச பேச்சு!!

 

“புருஷனை கொன்று விட்டு நிவாரணம் தரும் திமுக – அதிமுக”:  சீமான் ஆவேச பேச்சு!!

இல்லத்தரசிகளுக்கு ஊக்கத்தொகை அளிப்பது புருஷனை கொன்று விட்டு நிவாரணம் தரும் கதை என்று சீமான் விமர்சித்துள்ளார்.

தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் சீமான் 117 ஆண் வாக்காளர்கள், 117 பெண் வாக்காளர்களை களமிறக்கியுள்ளார். நேற்று விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் ஜெ.செல்வத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார் சீமான். அப்போது பேசிய அவர் , எத்தனை தேர்தல்களை நாம் சந்தித்து விட்டோம். மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் முடியவில்லை. திமுக – அதிமுக தமிழக மக்களை ஏமாற்ற பார்க்கிறது.ஆனால் நாம் தமிழர் பிள்ளைகள் மக்களை காக்க எண்ணுகின்றனர். திமுக – அதிமுக வைத்துள்ள 4 திட்டங்கள் போனஸ், சலுகை, மானியம், இலவசம். அவர்களிடம் தொலைநோக்கு திட்டங்கள் இல்லை. எனக்கு தேவை என் இனத்தின் விடுதலை; அதை நிச்சயம் என் தலையே போனாலும் நிறைவேற்றுவோம்” என்றார்.

“புருஷனை கொன்று விட்டு நிவாரணம் தரும் திமுக – அதிமுக”:  சீமான் ஆவேச பேச்சு!!

தொடர்ந்து பேசிய அவர், “1,000, 1,500 ரூபாய் இல்லத்தரசிகளுக்கு கொடுத்தப்பதாக கூறுகிறார்கள். உதவி தொகைக்கு பதில் வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுங்கள். ஆட்சிக்கு ஆட்சி காசை ஏற்றித்தருவது பிச்சைக்காரர்களை நினைப்பது போல தானே. உதவி தொகையை கொடுத்து விட்டு, பிறகு புருஷனை குடிக்கவைத்து அதை பிடுங்கி மீண்டும் மனைவியிடம் கொடுப்பீர்களா? ‘புருஷனை கொலை செய்து விட்டு மனைவிக்கு நிவாரணம் தரும் கதை இது” என்றார்.

“புருஷனை கொன்று விட்டு நிவாரணம் தரும் திமுக – அதிமுக”:  சீமான் ஆவேச பேச்சு!!

அத்துடன் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், பெண் காவலர்களுக்கு 6 மணிநேரமும், ஆண் காவலர்களுக்கு 8 மணி நேரமும் மட்டுமே வேலை சுழற்சி முறையில் வாரம் ஒருமுறை விடுமுறை , பள்ளிகளின் தரத்தையும், மருத்துவமனைகளின் தரத்தையும் உலகத் தரத்திற்கு மாற்றுவோம் உள்ளிட்ட வாக்குறுதிகளையும் முன்வைத்தார்.