பூந்தமல்லி வட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 9 குடிநீர் ஆலைகளுக்கு சீல்வைப்பு

 

பூந்தமல்லி வட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 9 குடிநீர் ஆலைகளுக்கு சீல்வைப்பு

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த 9 குடிநீர் ஆலைகளுக்கு, வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். பூந்தமல்லி வட்டத்திற்கு உட்பட்ட செம்பரம்பாக்கம், குத்தம்பாக்கம், அயனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உரிய அனுமதியின்றி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கம்பெனிகள் செயல்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

பூந்தமல்லி வட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 9 குடிநீர் ஆலைகளுக்கு சீல்வைப்பு

அதன்பேரில் திருவள்ளூர் ஆர்.டி.ஓ. பிரீத்தி பார்கவி தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குடிநீர் நிறுவனங்களில் நேரில் சென்று ஆய்வுசெய்தனர். அப்போது முறையான அனுமதி பெறாமல் 9 குடிநீர் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த குடிநீர் ஆலைகளுக்கு மின் இணைப்புகளை துண்டித்து, தண்ணீர் எடுக்கும் பைப்லைன் அறுத்து எடுக்கப்பட்டு பூட்டி சீல் வைத்தனர். மேலும் உரிய அனுமதி பெற்ற பிறகு குடிநீர் கம்பெனிகள் இயங்க அனுமதி அளிக்கப்படும் என்றும், அதுவரை குடிநீர் கம்பெனிகள் இயங்க கூடாது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.