ஈரோட்டில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 5 ஜவுளி கடைகளுக்கு சீல் வைப்பு!

 

ஈரோட்டில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 5 ஜவுளி கடைகளுக்கு சீல் வைப்பு!


ஈரோடு

ஈரோடு மாநகர பகுதியில் கொரோனா ஊரடங்கை மீறி செயல்பட்ட 5 ஜவுளி கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

ஈரோடு மாநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மாநகராட்சி அதிகாரிகள் ஆங்காங்கே திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின்போது முக கவசம் அணியாமல் வருபவர்கள், சமூக இடைவெளியை கடை பிடிக்காதவர்கள், அனுமதியின்றி கடையை திறந்து வைத்து வியாபாரத்தில் ஈடுபடுபவர்களை கண்காணித்து அபராதம் விதித்தும், கடைகளை பூட்டி சீல் வைத்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஈரோட்டில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 5 ஜவுளி கடைகளுக்கு சீல் வைப்பு!

இதேபோல் நேற்றும் மாநகராட்சி பணியாளர்கள், மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் ஆங்காங்கே தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, முகக் கவசம் அணியாமல் வந்த 112 பேருக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அனுமதியின்றி ஜவுளி கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்ட 5 கடைகளுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதித்த அதிகாரிகள், அந்த 5 கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர்.

இதேபோல், ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் கடந்த 3 நாட்களில் மட்டும் முகக் கவசம் அணியாமல் வந்த 300-க்கும் மேற்பட்டோருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன், ஊரடங்கை மீறி செயல்பட்ட ஜவுளிக்கடைகள் உள்பட 9 கடைகளுக்கு ரூ.5,000 அபராதம் விதித்து, அந்த 9 கடைகளுக்கும் பூட்டி சீல் வைக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.