ஆகஸ்ட் மாதம் திறக்கப்படுகிறதா பள்ளிகள்?..ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்தாக தகவல்!

 

ஆகஸ்ட் மாதம் திறக்கப்படுகிறதா பள்ளிகள்?..ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்தாக தகவல்!

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதே போல, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடந்து முடிந்து விட்டன. தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா, கல்லூரிகளில் எப்போது தேர்வு நடைபெறும் என்று பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இதனிடையே 10 ஆம் வகுப்பு மனவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் மாதம் திறக்கப்படுகிறதா பள்ளிகள்?..ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்தாக தகவல்!

அதன் படி ஜூன் 15 ஆம் தேதி தொடங்கும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 25 ஆம் தேதி முடிகிறது. அதனால் பள்ளிகளை எப்போது திறப்பது என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது. அதனால் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்தும் 10 ஆம் வகுப்பு தேர்வுக்கு மையங்கள் போடுவது குறித்தும் அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

அந்த கூட்டத்தில், தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், 6 முதல் 12 வகுப்பு வரை ஆகஸ்ட் மாதமும் 1 முதல் 5 வகுப்பு வரை செப்டம்பர் மாதத்திலும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.