கொரோனா பரவல் முடிவுக்கு வரும் வரை ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகள் நடத்தலாம் – பெற்றோர்கள் கோரிக்கை

 

கொரோனா பரவல் முடிவுக்கு வரும் வரை ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகள் நடத்தலாம் – பெற்றோர்கள் கோரிக்கை

சென்னை: கொரோனா பரவல் முடிவுக்கு வரும் வரை ஆன்லைன் மூலம் வகுப்புகளை பள்ளிகள் நடத்தலாம் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. அவை விரைவில் நடைபெற உள்ளன. வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா ஊரடங்கால் கடைசி கல்வியாண்டே இன்னும் முடிவுக்கு வரவில்லை.

கொரோனா பரவல் முடிவுக்கு வரும் வரை ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகள் நடத்தலாம் – பெற்றோர்கள் கோரிக்கை

இந்நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலை மாதம் முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கொரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் வரும்வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர்கள் change.org என்ற இணையதளம் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் எதிர்வரும் கல்வியாண்டு முழுவதும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தலாம் என்று பெற்றோர்கள் கூறுகின்றனர். இதற்கான மனுவில் இதுவரை சுமார் 2.57 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.