நாளை பள்ளி – கல்லூரிகள் திறப்பு… ஈரோடு மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

 

நாளை பள்ளி – கல்லூரிகள் திறப்பு… ஈரோடு மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

ஈரோடு

ஈரோட்டில் நாளை பள்ளி, கல்லூரிகள் திறப்பையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், விடுதிகளும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. எனினும் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்காத வகையில் அவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதில் மாணவ- மாணவிகள் பங்கேற்று வந்தனர். இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியதால் நாளை முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடங்கப்படுகிறது. இதேபோல், கல்லூரிகளும் நாளை முதல் திறக்கப்படுகிறது. இதையொட்டி பள்ளிகளில் தூய்மைப்படுத்தும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது.

நாளை பள்ளி – கல்லூரிகள் திறப்பு… ஈரோடு மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

ஈரோடு மாவட்டத்தில் மொத்தமுள்ள 403 மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகள் நாளை திறக்கப்பட்டு, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் நேரடியாக தொடங்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. மாணவ – மாணவிகள், ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. வகுப்பறையை தூய்மைப்படுத்தும் பணிகள் நிறைவடைந்து உள்ளன. ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள், சமூக இடைவெளி கடைப்பிடித்து அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள், பள்ளி பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

மாவட்டத்தில் மொத்த உள்ள 8,904 ஆசிரியர்கள், பணியாளர்களில் 70 சதவீதம் பேர் ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக் கொண்டு இருந்தனர். தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, அதன் மூலம் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. மாணவர்கள் அதிகம் உள்ள வகுப்புகளில் சுழற்சி முறையில் பாடம் நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாணவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முக கவசம் அணியாமல் வரும் மாணவர்களுக்கு, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் முக கவசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளை பள்ளி – கல்லூரிகள் திறப்பு… ஈரோடு மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

பிளஸ் 2, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும், மற்ற வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையிலும் பாடங்கள் எடுக்கப்படும். வகுப்பறையின் நுழைவாயில் கிருமிநாசினி, சனிடைசர் தயாராக வைக்கப்பட்டு உள்ளன. மாணவர்களின் உடல் வெப்ப நிலையை தெரிந்து கொள்ளும் வகையில் தெர்மல் ஸ்கேனர் தயாராக வைக்கப்பட்டு உள்ளன. இதேபோல் நாளை முதல் கல்லூரிகளும் திறக்கப்படுவதால், அனைத்து முன்னேற்பாடுகளும் அதிகமாக நடந்து வருகிறது. 18 வயது நிரம்பிய அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதுநிலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்களும், மற்ற மாணவர்களுக்கு சுழற்சி முறையிலும் பாடங்கள் நடத்தப்பட உள்ளது.

கிட்டத்தட்ட ஒன்றை வருடங்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் நாளை திறக்கப்படுவதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களது நண்பர்கள், தோழிகளை காணும் ஆவலில் அவர்கள் உள்ளனர். இந்த நிலையில், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. பள்ளி, கல்லூரி அடையாள அட்டை, சீருடை இருந்தாலே அவர்கள் அரசு பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.