“நிர்வாண படத்தால் நிர்மூலமாக்கப்பட்டேன்” -14 வயது மாணவியின் பரிதாப கதை

 

“நிர்வாண படத்தால் நிர்மூலமாக்கப்பட்டேன்” -14 வயது மாணவியின் பரிதாப கதை

ஒரு பள்ளி மாணவியின் நிர்வாண போட்டோவை அவரின் வகுப்பு தோழன் ஊடகத்தில் வெளியிட்டதால் அவர் மீது போலிஸில் புகாரளிக்கப்பட்டது .

“நிர்வாண படத்தால் நிர்மூலமாக்கப்பட்டேன்” -14 வயது மாணவியின் பரிதாப கதை

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் ஒரு 14 வயது பள்ளி மாணவியோடு அவருடன் பள்ளியில் படிக்கும் ஒரு வகுப்பு தோழன் ஆன்லைனில் நட்பு கொண்டார் .அப்போது இருவரும் பல மாதங்கள் இணைய தளத்தில் அரட்டையடித்து வந்தனர் .திடீரென ஒரு நாள் அந்த மாணவன் அந்த மாணவியின் நிர்வாண போட்டோக்களை அனுப்புமாறு கேட்டான் .அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அதற்கு மறுத்தார் .அதன் பிறகு அந்த மாணவி மறுத்ததை கண்டு அந்த மாணவர் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காமித்தார் .அவரின் ஆசை பேச்சால் மயங்கிய அந்த மாணவி தன்னுடைய நிர்வாண புகைபடங்களை அவருக்கு அனுப்பினார் .
அவரின் நிர்வாண போட்டோக்களை பெற்ற அந்த மாணவர் அவற்றை உடனே தன்னுடைய நண்பர்களுக்கும்,உறவினர்களுக்கும் அனுப்பினார் .மேலும் சமூக ஊடகத்தில் போலியாக ஒரு சுய விவரத்தை உருவாக்கி அதில் அவரின் நிர்வாண போட்டோக்களை போஸ்ட் செய்தார் .அதன் பிறகு பலர் அவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு அழைத்தனர் .
மேலும் தன்னுடைய போட்டோக்களை ஊடகத்தில் பார்த்த அந்த சிறுமி மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளானார் .அதனால் அவர் மிகவும் மன சோர்வுடன் காணப்பட்டார் .அதை கண்டு அவரின் தாயார் அவரிடம் விசாரித்தார் .அப்போது அவர் தன்னுடைய வகுப்பு தோழன் தன்னுடைய ஆபாச போட்டோவை வெளியிட்ட விவரத்தை கூறினார் .அதனால் அவரின் தாயார் அந்த மாணவன் மீது புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .

“நிர்வாண படத்தால் நிர்மூலமாக்கப்பட்டேன்” -14 வயது மாணவியின் பரிதாப கதை