பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… தோழியின் சகோதரர் போக்சோவில் கைது…

 

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… தோழியின் சகோதரர் போக்சோவில் கைது…

கோவை

கோவையில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பிரகாஷ்(18).இந்த நிலையில் இவரது தங்கையுடன் படித்து வரும் 16 வயது சிறுமியுடன், பிரகாஷுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. நாளடைவில் அது காதலாக மாறிய நிலையில், சிறுமியுடன் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்துள்ளார்.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… தோழியின் சகோதரர் போக்சோவில் கைது…

மேலும், அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த நிலையில், மகளின் காதல் விவகாரம் அறிந்த பெற்றோர் அவரை கண்டித்து, கேரளாவில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்தனர். அப்போது, சிறுமிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதால், உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, சிறுமி கர்ப்பாமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்த போலீசார், பிரகாஷை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.