குடும்ப தகராறில் அரசுப்பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை!
Nov 3, 2020, 16:15 IST1604400344000
தர்மபுரி
தர்மபுரி அருகே குடும்ப தகராறில் அரசுப்பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி குமாரசாமிபேட்டை பகுதியை சேர்ந்தவர் அரசுப்பள்ளி ஆசிரியர் அருள்மணி. இவரது மனைவி சுதா. இவர் தர்மபுரி அரசு அவ்வையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், அருள்மணி மற்றும் சுதா தம்பதியினர் இடையே நேற்று தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுதா நேற்றிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலின் பேரில் ஆசிரியை சுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்