குடும்ப தகராறில் தாயின் கழுத்தை அறுத்துக் கொன்ற பள்ளி ஆசிரியர்!

 

குடும்ப தகராறில் தாயின் கழுத்தை அறுத்துக் கொன்ற பள்ளி ஆசிரியர்!

கரூர்

குளித்தலையில் குடும்ப தகராறில் தாயாரின் கழுத்தை அறுத்துக் கொன்ற தனியார் பள்ளி ஆசிரியரை போலீசார் கைதுசெய்தனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த கணக்கப்பிள்ளையூர் கிராமத்தை சேர்ந்தவர் மருதை. விவசாயி. இவரது மனைவி முருகாயி. இவர்களது மகன் பொன்னுசாமி (40). இவர் கரூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே, கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் பொன்னுசாமி வீட்டில் இருந்து வந்துள்ளார்.

குடும்ப தகராறில் தாயின் கழுத்தை அறுத்துக் கொன்ற பள்ளி ஆசிரியர்!

அப்போது, தாயார் முருகாயி-க்கும், பொன்னுசாமிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தாய் – மகன் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த பொன்னுசாமி வீட்டில் கத்தியால் தாயார் முருசாயி-இன் கழுத்தை அறுத்துக் விட்டு தப்பியோடினார். இதில் பலத்த காயமடைந்த முருகாயி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் முருகாயி-இன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய பொன்னுசாமியை கைதுசெய்தனர். இந்த சம்பவம் குளித்தலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.