100% வாக்களிப்போம் வடிவில் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!

 

100% வாக்களிப்போம் வடிவில் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!

அரியலூர்

அரியலூரியில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற வடிவில் அமர்ந்து தனியார் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சட்டமன்ற தேர்தலில், அரியலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து, மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, இன்று அரியலூர் மாவட்டம் கீழப்பழூரில் உள்ள சுவாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ரத்னா தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

100% வாக்களிப்போம் வடிவில் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!

இதில், 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியகள் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற வடிவில் அமர்ந்து அசத்தினர். மேலும், தேர்தல் நடைபெறும் தேதியை குறிப்பிடும் விதமாகவும் அமர்ந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியின் போது, அரியலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை, ஆட்சியர் ரத்னா தலைமையில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஏற்றுகொண்டனர்.