தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி பலி!

 

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி பலி!

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மின்மாற்றியில் அமைத்திருந்த இரும்பு வேலியில் மின்சாரம் பாய்ந்ததில், 11 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகேயுள்ள சவேரியார் புரம் கணேஷ் நகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜா. இவரது மகள் ரம்யா (11). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை சிவராத்திரியை யொட்டி, சிறுமி ரம்யா வீட்டின் அருகேயுள்ள ஆதிபராசக்தி நகர் விநாயகர் கோயிலுக்கு சென்றார். அப்போது, கோயிலின் அருகேயுள்ள மின் மாற்றியை சுற்றி அமைத்திருந்த இரும்பு வேலியை சிறுமி தொட்டுள்ளளார்.

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி பலி!

அப்போது,மழையின் காரணமாக இரும்பு வேலியில் மின்சாரம் பாய்ந்ததில், தூக்கி வீசப்பட்ட சிறுமி ரம்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.