கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு

 

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் குளித்த பள்ளி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி மாதாகோவில் தெருவை சேர்ந்த குமார் – கல்யாணி தம்பதியினரின் மகன் ரோகித்(13). தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த ரோகித், அங்குள்ள விவசாய கிணற்றுக்கு நண்பர்களுடன் சென்று குளித்துள்ளார்.

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு

அப்போது எதிர்பாராத விதமாக ரோகித் தண்ணீரில் மூழ்கியுள்ளார். நண்பர்களின் கூச்சல் சத்தம் கேட்டு அப்பகுதி இளைஞர்கள் கிணற்றில் குதித்து தேடிய நிலையில், அதிக தண்ணீர் காரணமாக ரோகித்தை கண்டுபிடிக்க முடியவில்லை. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறை வீரர்கள் நீண்டநேர போராட்டத்திற்கு பின் ரோகித்தின் உடலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு