கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவர் பலி!

 

கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவர் பலி!

விழுப்புரம்

திண்டிவனம் அருகே கிணற்றில் தவறி விழுந்ததில் படுகாயமடைந்த 10ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த அகூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் ஹரிஷ்(15). இவர் அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று, ஹரிஷ் தனது நண்பர்களுடன் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் சென்று குளித்துக் கொண்டிருந்தார்.

கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவர் பலி!

பின்னர், அனைவரும் மேலே ஏறியபோது, ஹரிஷ் எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர், நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், வெள்ளிமேடுபேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகினறனர்.