“பள்ளி குழந்தை முதல் பாலியல் தொழிலாளி குழந்தை வரை” -ஒரு ப்ரின்சிபால் செய்யுற வேலையா இது ?

 

“பள்ளி குழந்தை முதல் பாலியல் தொழிலாளி குழந்தை வரை” -ஒரு ப்ரின்சிபால் செய்யுற வேலையா இது ?


பல பெண் குழந்தைகளை கடத்தி பல லட்சம் பணம் ஈட்டிய பள்ளிக்கூட ப்ரின்சிபாலை போலீசார் கைது செய்தனர்


மேற்கு வங்கத்தின் பாங்குரா மாவட்டத்தில் ஒரு பள்ளியின் ப்ரின்சிபாலாக கமல்குமார் ராஜோரியா என்பவர் வேலை பார்த்து வந்தார் . ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட ரஜோரியா சமீபத்தில் பாங்குராவுக்கு மாற்றப்பட்டார்.அவர் தன்னுடைய பள்ளியில் படிக்கும் சில மாணவிகளை வேறு பல நபர்களுக்கு கடத்தி விற்பதாக பல புகார்கள் குவிந்துள்ளது .அதனால் போலீசார் அவரை ரகசியமாக கண்காணித்தனர் .அப்போது அவரும் அவருடன் ஆசிரியர் சுஷ்மா ஷர்மாவும் ஒரு வேனில் கடந்த ஞாயிற்று கிழமையன்று மூன்று மாணவிகளை ஒரு வேனில் கடத்தி செல்ல முற்பட்டதை கண்டு பிடித்தனர் .
மேலும் உள்ளூர் மக்களும் அவர்களைப்பற்றியும் அவர்களின் கடத்தலை பற்றியும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .அப்போது அவர்களை போலீசார் பின் தொடர்ந்து சென்று பிடித்தனர் .அப்போது அந்த ப்ரின்சிபாலிடம் நடத்திய விசாரணையில் அவர் எட்டு மாதம் முதல் ஆறு வயது வரையுள்ள குழந்தைகளை கடத்தி வெளியூரில் உள்ள நபர்களுக்கு லட்சக்கணக்கில் விற்று பணம் சம்பாதித்துள்ளதை கண்டு பிடித்தனர் .
மேலும் அவரின் வங்கி கணக்கிலிருந்து பல லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தார்கல். அவர் பல பாலியல் தொழில் செய்யும் பெண்களின் பெண் குழந்தைகளையும் கடத்தி இவ்வாறு பணம் ஈட்டியுள்ளதையும் கண்டு பிடித்து அவரை கைது செய்து ,அவர் மீது வழககு பதிந்து விசாரித்து வருகின்றனர் .

“பள்ளி குழந்தை முதல் பாலியல் தொழிலாளி குழந்தை வரை” -ஒரு ப்ரின்சிபால் செய்யுற வேலையா இது ?