புதுச்சேரியில் 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை!

 

புதுச்சேரியில் 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை!

புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .

புதுச்சேரியில் 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை!

வங்கக்கடலில் கடந்த 21 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நிவர் புயலாக அதிதீவிரமாகி உள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த புயலானது நள்ளிரவு முதல் அதிகாலை வரை காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது.

புதுச்சேரியில் 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை!

இந்நிலையில் புதுச்சேரியில் நிவர் புயல் காரணமாக நாளை முதல் நவம்பர் 28ம் தேதி வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் புதுச்சேரியில் கடந்த மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த சூழலில் மீண்டும் கனமழை காரணமாக பள்ளிகள் மூடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.