சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில், பள்ளி மாணவி பலி!

 

சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில், பள்ளி மாணவி பலி!

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 10ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் நேற்றிரவு ராமேஸ்வரம் கோயிலுக்கு சுற்றுலா வேனில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். வேனை திருத்தங்கலை சேர்ந்த கதிரேசன் என்பவர் ஓட்டிச்சென்றார். இன்று அதிகாலை ராமநாதபுரம் மாவட்டம் லாந்தை பகுதியில் சென்றபோது, வேனின் டயர் திடீரென வெடித்தது.

சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில், பள்ளி மாணவி பலி!

இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில், வேனில் அமர்ந்திருந்த 10ஆம் வகுப்பு மாணவி வெண்ணிலா உள்பட 3 பேர் படுகாயமடைந்தார். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால், வழியிலேயே மாணவி வெண்ணிலா பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் முதலுதவி சிகிச்சைக்கு பின், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து ராமநாதபுரம் நகர போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.