செல்போன் பார்ப்பதை தாய் கண்டித்ததால், பள்ளி மாணவி தற்கொலை!

 

செல்போன் பார்ப்பதை தாய் கண்டித்ததால், பள்ளி மாணவி தற்கொலை!

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே செல்போன் பார்ப்பதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த தனியார் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் புக்கிரவாரி பகுதியை சேர்ந்தவர் பரசுராமன். இவரது மகள் பிரியதர்ஷினி (13). இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா காரணமாக வீட்டில் இருந்து வந்த பிரியதர்ஷினி, அடிக்கடி செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

செல்போன் பார்ப்பதை தாய் கண்டித்ததால், பள்ளி மாணவி தற்கொலை!

இதனால், அவரை தாய் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த பிரியதர்ஷினி, வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்டு, உறவினர்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிரியதர்ஷினி, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.