ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ரத்து- அண்ணா பல்கலைக்கழகம்

 

ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ரத்து- அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணாவின் பெயரில் அண்ணா நூற்றாண்டு ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பாக அண்ணா நூற்றாண்டு ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் (ஏசிஆர்எப்) ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மாதம் ரூ.16 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையும், ஆண்டுக்கு ரூ.25 ஆயிரமும் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக்கான மையத்தின் (சிஎப்ஆர்) இயக்குநர் கே.பி.ஜெயா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ஆராய்ச்சிக்கான மையத்தின் 14-வது செயற்குழு ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெற்றது. அதில், அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாக கல்லூரிகளில் ஏசிஆர்எப் திட்டத்தின் கீழ் முழு நேர ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கான செலவினங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஏசிஆர்எப் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் ரூ.25 ஆயிரம் ரத்து செய்யப்படுகிறது. இந்த புதிய அறிவிப்பு 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.