“சித்ராவை கலாய்த்த எஸ்.பி.பி “

 

“சித்ராவை கலாய்த்த எஸ்.பி.பி “

எஸ்பிபி எளிமையான மனிதர் மட்டுமல்ல, வேடிக்கையான, ஜாலியான மனிதர் என்பதையும் பல சம்பவங்கள் மூலம் பார்க்க முடியும். துறவி போல வாழ்க்கை வாழ்வதில் எனக்கு நம்பிக்கை கிடையாது, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என மேடையிலேயே அறிவித்தவர்.

“சித்ராவை கலாய்த்த எஸ்.பி.பி “

எஸ்.பி.பியோடு ஜாலியான நிகழ்வொன்றை பாடகி சித்ரா ஒருமுறை பகிர்ந்து கொண்டார். ஒருமுறை தெலுங்கு பாடல் பாட சித்ராவை அழைத்துள்ளனர். தெலுங்கு மொழி தெரியாத சித்ரா, எஸ்.பி.பியிடம் உதவி கேட்டுள்ளார். எஸ்.பி.பியும் சில வரிகளை எழுதி சித்ராவிடம் கொடுத்து அனுப்பி உள்ளார்.

“சித்ராவை கலாய்த்த எஸ்.பி.பி “

சித்ரா ஸ்டூடியோவில் பாடத் தொடங்கியதும், அங்கிருந்தவர்கள் சிரிக்க தொடங்கிவிட்டார்களாம். என்ன ஏதென்று விசாரித்தால், அந்த படத்தின் இயக்குநரை சித்ரா திட்டுவதுபோல வரிகளை மாற்றி எழுதி கொடுத்திருந்தாராம் எஸ்.பி.பி. அந்த படத்தின் இயக்குநர், சித்ராவை அழைத்து, என் மேல் என்ன கோவம் ? பாட்டுல திட்டுவீங்களா என கேட்க, சித்ரா அழுதே விட்டாராம். எஸ்.பி.பியும் அங்குதான் இருந்துள்ளார்.

பாடல் வரிகளை சித்ராவுக்கு மாற்றி எழுதி கொடுத்தது யார் என கேட்க, அப்போதுதான் எஸ்.பி.பி எண்ட்ரி ஆகி இருக்கிறார். அப்புறம் என்ன சித்ராவை கலாய்க்க எஸ்.பி.பி செய்த வேலை என தெரிந்து அந்த இடமே கலகலப்பாகி விட்டதாம்.

“சித்ராவை கலாய்த்த எஸ்.பி.பி “

ரெக்கார்டிங் முடிந்து வந்த சித்ரா, எஸ்.பி.பி யிடம் இது பற்றி கேட்க, சும்மா ஜாலிக்காக என சிரித்துள்ளார் எஸ்.பி.பி. அதுபோல, பல நிகழ்வுகளை அவர் மேடை நிகழ்ச்சிகளில் பார்க்க முடியும். திடீரென பாடல் வரிகளை மாற்றி ஜாலி மோடுக்கு போய் வருவார். வாழ்க்கையை கொண்டாட்டமாக்கியவர் எஸ்.பி.பி. ஆனால், இன்று நீங்கள் இல்லாமல் ரசிகர்களுக்கு ஏது கொண்டாட்டம் எஸ்.பி.பி சார்.

“சித்ராவை கலாய்த்த எஸ்.பி.பி “