எஸ்பிபி நினைவிடம் – 2வது நாளாக பொதுமக்கள் அஞ்சலி

 

எஸ்பிபி நினைவிடம் – 2வது நாளாக பொதுமக்கள் அஞ்சலி

திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் எஸ்பிபியின் நினைவிடத்தில் 2வது நாளாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்து வருகின்றனர். நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

எஸ்பிபி நினைவிடம் – 2வது நாளாக பொதுமக்கள் அஞ்சலி

மறைந்த பிரபல பிண்ணனிப் பாடகர் எஸ்பிபியின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவர்களுக்கு சொந்தமான பண்ணை வீடு அமைந்துள்ள தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

எஸ்பிபி நினைவிடம் – 2வது நாளாக பொதுமக்கள் அஞ்சலி

உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் தமது தந்தைக்கு நினைவு இல்லம் கட்டப்படும் என்று எஸ்பிபியின் மகன் சரண் அறிவித்திருந்தார். கொரோனா பாதுகாப்பு காரணமாக அங்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படும் என பண்ணை நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது. இதையடுத்து அங்கு தடுப்புகள், தற்காலிக நிழற்குடைகள் ஆகியவை அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அவரது புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.

எஸ்பிபி நினைவிடம் – 2வது நாளாக பொதுமக்கள் அஞ்சலி

நேற்று ஏராளமான பொதுமக்கள் வருகை தந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்த வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையே சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்றும், திங்கள்கிழமை முதல் பொதுமக்கள் வழக்கம் போல வந்து நினைவிடத்தை பார்வையிட்லாம் என்றும் பண்ணை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.