“எஸ்பிபி-க்கு அஞ்சலி செலுத்த அனுமதியில்லை” : திருவள்ளூர் எஸ்பி தகவல்!

 

“எஸ்பிபி-க்கு அஞ்சலி செலுத்த அனுமதியில்லை” : திருவள்ளூர் எஸ்பி தகவல்!

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ள பண்ணை வீட்டில் திருவள்ளூர் எஸ்.பி. ஆய்வு மேற்கொண்டார்.

“எஸ்பிபி-க்கு அஞ்சலி செலுத்த அனுமதியில்லை” : திருவள்ளூர் எஸ்பி தகவல்!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தாமரை பக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ் பி பாலசுப்ரமணியம் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க எஸ் பி பாலசுப்ரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்படும். எஸ்பிபி உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ள பண்ணை வீட்டின் முன் ரசிகர்கள் திரண்டுள்ளனர்.

“எஸ்பிபி-க்கு அஞ்சலி செலுத்த அனுமதியில்லை” : திருவள்ளூர் எஸ்பி தகவல்!

இந்நிலையில் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் இறுதி சடங்கின் போது பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தன் தெரிவித்துள்ளார். பண்ணை வீட்டில் ஆய்வு மேற்கொண்ட அவர், பண்ணை வீட்டுக்கு 2 கி.மீ. முன்பாகவே தடுப்புகள் ஏற்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.