வாடிக்கையாளர்களிடம் ரூ.300 கோடி ஆட்டைய போட்ட எஸ்பிஐ… மக்களே உஷாரா இருங்க!

 

வாடிக்கையாளர்களிடம் ரூ.300 கோடி ஆட்டைய போட்ட எஸ்பிஐ… மக்களே உஷாரா இருங்க!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எஸ்பிஐ. அரசுத் துறையைச் சேர்ந்த வங்கி என்பதால் மக்களிடம் நல்ல வரவேற்பு பல ஆண்டுகளாகவே இருக்கிறது. நாடு முழுவதும் 40 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது, இதைச் சாதகமாகப் பயன்படுத்தி கடந்த ஐந்து ஆண்டுகளில் 300 கோடி ரூபாயை தேவையில்லாமல் வசூலித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மும்பை ஐஐடி நடத்திய ஆய்வில் இந்த விவரம் வெளிவந்திருக்கிறது.

வாடிக்கையாளர்களிடம் ரூ.300 கோடி ஆட்டைய போட்ட எஸ்பிஐ… மக்களே உஷாரா இருங்க!

ஜீரோ பேலன்ஸ் அல்லது அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு (BSBDA) வாடிக்கையாளர்களிடமிருந்து இந்த அபராதத் தொகையை வசூலித்திருக்கிறது. இந்தக் கணக்கு பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்காக அறிவிக்கப்பட்ட வங்கிக் கணக்கு. இதனால் குறைந்தபட்ச வசதிகள் மட்டுமே அளிக்கப்படும். அத்துடன் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. கணக்கை தொடங்க பணம் ஏதும் செலுத்த தேவையில்லை என்பதால் ஜீரோ பேலன்ஸ் கணக்கு என்றும் கூறப்படுகிறது. அத்துடன் கணக்கில் பணம் இல்லாமல் போனாலும் அபராதம் கிடையாது.

வாடிக்கையாளர்களிடம் ரூ.300 கோடி ஆட்டைய போட்ட எஸ்பிஐ… மக்களே உஷாரா இருங்க!

இரு வருடங்களுக்கு முன் இந்தக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் அபராதம் விதிக்கப்படாது என்று 2013ஆம் ஆண்டின் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல் கூறுகிறது. ஆனால் இந்தக் கணக்கு வைத்திருப்பவர்களிடம் 2015ஆம் ஆண்டிலிருந்து மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் 17.70 ரூபாய் எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் வசூலிக்கின்றன.

வாடிக்கையாளர்களிடம் ரூ.300 கோடி ஆட்டைய போட்ட எஸ்பிஐ… மக்களே உஷாரா இருங்க!

அவ்வாறு 2015ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டு வரை எஸ்பிஐ 12 கோடி வாடிக்கையாளர்களிடமிருந்து 300 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. 2018-19ஆம் ஆண்டில் 72 கோடி ரூபாயும், 2019-20ஆம் ஆண்டில் 158 கோடி ரூபாயும் வசூலித்திருக்கிறது. அதேபோல பஞ்சாப் நேஷனல் வங்கி 3.9 கோடி வாடிக்கையாளர்களிடமிருந்து 9.9 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இவ்வாறு வசூலித்து ஏழை மக்களின் வயிற்றில் அடிப்பது அறமற்ற செயல் என ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல ரிசர்வ் வங்கியின் விதிகளை வெளிப்படையாகவே மீறியிருப்பதால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருக்கிறது.