‘ஆவினைக் காக்க அதிரடிப் படை அமையுங்கள்’ பால் முகவர் சங்கம் கோரிக்கை

 

‘ஆவினைக் காக்க அதிரடிப் படை அமையுங்கள்’ பால் முகவர் சங்கம் கோரிக்கை

தமிழ்நாடு அரசின் நிறுவனமான ‘ஆவின்’ -ல் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் அவற்றைத் தடுப்பதற்காகவும் நிறுவனர் & மாநில தலைவர்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் மாநில தலைவரான சு.. பொன்னுசாமி முதல்வருக்கு மின்னஞ்சல் வழியாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

‘ஆவினைக் காக்க அதிரடிப் படை அமையுங்கள்’ பால் முகவர் சங்கம் கோரிக்கை

அவரின் கோரிக்கையில், ‘கிராமப்புறங்களில் விவசாய பெருமக்கள் உற்பத்தி செய்து தரும் பாலினை கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து, அதனை பால் குளிர்விப்பு மையங்களில் சேகரித்து, பிரதான பால் குளிரூட்டும் நிலையங்களுக்கு அனுப்பி இருப்பு வைத்து, அதன் பிறகு ஆவின் பால் பண்ணைகளுக்கு கொண்டு வருவதால் பாக்கெட்டில் அடைத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய தாமதமாகும் சூழல் கடந்த 2009ம் ஆண்டுக்கு முன் இருந்து வந்தது.

அவ்வாறான நடைமுறையால் பால் விரைவில் கெட்டுப் போகும் சூழல் ஏற்பட்டதாலும், மக்களுக்கு தரமான பால் தங்குதடையின்றி கிடைத்திட மாட்டின் மடியில் இருந்து கறந்த சில மணி நேரங்களில் பால் பண்ணைகளுக்கு கொண்டு வர வேண்டும் என்கிற நோக்கத்திலும் கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு நிதியுதவியுடன் தூய பால் உற்பத்தி திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனத்திற்கு 300க்கும் மேற்பட்ட மொத்த பால் குளிர்விப்பான்களை (Bulk Milk Cooler) தமிழக அரசு நிறுவியது.

‘ஆவினைக் காக்க அதிரடிப் படை அமையுங்கள்’ பால் முகவர் சங்கம் கோரிக்கை

ஆனால் என்ன நோக்கத்திற்காக அப்போதைய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்ததோ அந்த நோக்கம் நிறைவேறாமல் தற்போது மோசடிகளின் மொத்த உற்பத்தி மையமாக ஆவின் நிறுவனத்தின் மொத்த பால் குளிர்விப்பான் (BMC) நிலையங்கள் திகழ்கின்றன.

குறிப்பாக மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கோவை, சேலம், திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஒன்றியங்களில் இருக்கும் மொத்த பால் குளிர்விப்பான் (BMC) நிலையங்களிலும், பால் குளிரூட்டும் நிலையங்களிலும் (Milk Cilling Centre) நீண்ட காலமாக பணியாற்றி வரும் பால் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் பால் குளிர்வு நிலைய பொறுப்பாளர்கள் இடைத்தரகர்களோடும், மோசடிப் பேர்வழிகளோடும் கூட்டு சேர்ந்து பாலினை திருடி விற்பனை செய்து விட்டு அதற்கு பதில் தண்ணீர் உள்ளிட்ட பல்வேறு கலப்படங்களை செய்து அதன் மூலம் அவர்கள் அதிக லாபம் ஈட்டி ஆவினுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி கூட்டுறவு சங்க உறுப்பினர்களாக இருக்கும் பால் உற்பத்தியாளர்களிடம் மட்டுமே பால் கொள்முதல் செய்ய வேண்டும் என்கிற விதி இருக்கும் போது ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் கூட்டுறவு சங்க உறுப்பினர்களிடம் பாலினை கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்பி விட்டு இடைத்தரகர்கள் தரும் பாலினை குறைந்த விலைக்கு (ஒரு லிட்டர் 20.00ரூபாய் முதல் 25.00ரூபாய் வரை) வாங்கி ஆவின் நிறுவனத்தின் கொள்முதல் விலைக்கு (ஒரு லிட்டர் 32.00ரூபாய்) கணக்கு எழுதியும் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்துவது என தொடர்ந்து முறைகேடுகள் அரங்கேறி வருகின்றன.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘ஆவினைக் காக்க அதிரடிப் படை அமையுங்கள்’ பால் முகவர் சங்கம் கோரிக்கை

மேலும், திருவண்ணாமலையில் நடந்த முறைகேடுகள் குறித்து விரிவாக எழுதியுள்ளனர். இறுதியாக,

‘ஆவின் நிறுவனத்திற்கு உடனடியாக “அதிரடி பறக்கும் படை” அமைத்திடவும், இதுவரை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆவின் பால் பண்ணைகளிலும், மொத்த பால் குளிர்விப்பான் (BMC) நிலையங்களிலும், பால் குளிரூட்டும் நிலையங்களிலும் (MCC) பணியாற்றும் தரக்கட்டுப்பாட்டு, பால் குளிர்வு நிலைய அதிகாரிகள், கொள்முதல் செய்யும் அதிகாரிகள், கூட்டுறவு சங்க அதிகாரிகளை ஆண்டுக்கு ஒரு முறை கட்டாய இடமாற்றம் செய்யும் நடைமுறையை தமிழக அரசு அமுல்படுத்திட வேண்டும். மேலும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இல்லாத வகையில் செயல்பட சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும்.

அவ்வாறு செய்யும் பட்சத்தில் மட்டுமே காலை, மாலை இருவேளைகளில் ஆவினுக்கு பால் வழங்கும் விவசாய பெருமக்கள் இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் முழுமையான பலனை அடைய முடியும் என்பதும், ஆவின் நிறுவனம் இழப்பை சந்திக்காமல் லாபத்தோடு இயங்க முடியும் என்பதும் மறுக்க முடியாத உண்மை. பால்வளத்துறை நலன் சார்ந்தும், ஆவின் நிறுவனத்தின் வளர்ச்சியை கவனத்தில் கொண்டும் தமிழக முதல்வர் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.’ என்று முதல்வரைக் கேட்டுள்ளனர்.