சுதந்திரப் போராட்டத்தில் பலரும் இணையக் காரணமாக இருந்த சாவர்க்கர்! – மோடி புகழாரம்

 

சுதந்திரப் போராட்டத்தில் பலரும் இணையக் காரணமாக இருந்த சாவர்க்கர்! – மோடி புகழாரம்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முன்னோடிகளில் ஒருவரான சாவர்க்கர் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், சுதந்திரப் போராட்டத்தில் பலரும் இணையக் காரணமாக இருந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில், “வீர சாவர்க்கரை அவரது பிறந்த தினமான இன்று வணங்குகிறேன். அவருடைய வீரம், சுதந்திரப் போராட்டத்தில் பலரை இணைக்கத் துணை புரிந்த விதம் மற்றும் சமூக சீர்திருத்தங்களை நினைவுகூர்கிறோம்” என்று கூறியுள்ளார்.

http://

மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து சிறையிலிருந்து வெளியே வந்து, ஆங்கிலேயருக்காக பணியாற்றி, ஆங்கிலேயர்களிடம் இருந்து பென்ஷன் வாங்கியவர் சாவர்க்கர் என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், பிரதமரின் இந்த வாழ்த்து எதிர்க்கட்சிகள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.