எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் தலைவன் சவுகத் அலியிடம் போலீசார் தீவிர விசாரணை!!

 

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் தலைவன் சவுகத் அலியிடம் போலீசார் தீவிர விசாரணை!!

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை தலைவன் சவுகத் அலி ஹரியானாவில் கைது செய்யப்பட்ட நிலையில் சென்னை அழைத்து வரப்பட்டார்.

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் தலைவன் சவுகத் அலியிடம் போலீசார் தீவிர விசாரணை!!

எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளையடித்த வழக்கில் ஹரியானாவை சேர்ந்த அமீர், வீரேந்திர ராவத், நஜீம் உசேன் என மூவர் கைதாகினர்.இவர்களை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்த தனிப்படை போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் கொள்ளைக் கும்பலின் தலைவன் சவுகத் அலியை போலீசார் தீவிரமாக தேடி வந்த சூழலில் சவுகத் அலி நேற்று கைது செய்யப்பட்டார்.

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் தலைவன் சவுகத் அலியிடம் போலீசார் தீவிர விசாரணை!!

இந்நிலையில் எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் மூளையாக செயல்பட்ட சவுகத் அலி சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார். எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் நூதன கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் சவுக்கத் அலியை, பெரியமேடு காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதையடுத்து விசாரணைக்குப்பின் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.