முகத்துவாரத்தை ஆழப்படுத்தக் கோரி மீனவர்கள் சத்தியாகிரக போராட்டம்!

 

முகத்துவாரத்தை ஆழப்படுத்தக் கோரி மீனவர்கள் சத்தியாகிரக போராட்டம்!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுக முகத்துவார பகுதியை ஆழப்படுத்தக் கோரி, இன்று தூத்தூர் மண்டலத்தை சேர்ந்த 8 கிராம
மீனவர்கள் தொடர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். சின்னத்துறை பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள்
கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது, முகத்துவாரப் பகுதியை அழப்படுத்தாததால் கடந்த 5 மாதங்களில் 4
மீனவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்த மீனவர்கள், அதிகாரிகள் உறுதி அளித்தபடி விரைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.
போராட்டம் காரணமாக தூத்தூர் மண்டல 8 மீனவ கிராமங்களை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.